தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம்

 

Advertisement

தஞ்சாவூர், ஜூன் 15: தஞ்சை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் கூறியதாவது:தஞ்சை மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞர்களை குறி வைத்து சில போலி ஏஜெண்டுகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த ஏஜெண்டுகள் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து போலி விசா மற்றும் டிராவலிங் விசா மூலம் மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஏஜெண்டுகளுக்கு உரிமம் இருக்கிறதா? என்று தெரியாமலே பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் போலிசாரிடம் மனு அளிப்பது அதிகரித்து வருகிறது. இது போன்ற ஆட்கள் அனுப்பும் ஏஜென்சிகளுக்கு உரிமம் ? இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள 9042149222 என்ற உதவி எண் மற்றும் poechennai@mea.in.gov.in < mailto:poechennai@mea.in.gov.in > முகவரி முலம் விவரங்களை சரிபார்த்து தெரிந்துகொள்ளலாம்.மேலும் உரிய அனுமதி பெறாமல் போலி ஏஜென்சிகள் நடத்தும் நிறுவனங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் தெரிவித்துள்ளார்.

Advertisement