தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷஊசி போட்டுக் கொண்டு டாக்டர் தற்கொலை வேலூரில் பரிதாபம்

 

Advertisement

வேலூர், ஜன.12: வேலூரில் முதுகலை டாக்டர் விஷஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.மணிகண்டன்(32). வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.டி முதுகலை மருத்துவம் முடித்துவிட்டு அரசுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இதனால் வேதனையில் இருந்து வந்த மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை தனது அறையை பூட்டிக் கொண்டுள்ளார். நீண்டநேரமாக கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து திறந்த அவரது உறவினர்கள் மணிகண்டன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை வேலூர் ஜிபிஎச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதுதொடர்பாக அவரது தந்தை ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News