தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் மருத்துவர் தின கொண்டாட்டம்

 

திருப்பூர், ஜூலை 4: ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமையில் நடந்த நிகழ்வில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ் முன்னிலை வகித்து வரவேற்றார். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியும் சிறப்பு பல் மருத்துவருமான மருத்துவர் அகிலா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளி தாளாளர் கூறியதாவது:மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் இடைவிடாத முயற்சிகளை அங்கீகரிக்கும் பொருட்டு மருத்துவர் தினத்தை நமது பள்ளியில் கொண்டாடி வருகிறோம். எதிர்காலத்தில் மருத்துவராக வரக்கூடிய நமது மாணவர்கள் அறம் சார்ந்த முறையில் சரியான செலவில் துல்லியமாக மருத்துவப் பணியை மேற்கொண்டு சமூக சேவையை ஊக்குவிக்கும் மனப்பான்மையோடு திகழ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நிறைவாக பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related News