தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

சேந்தமங்கலம், ஜூலை 1: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டியில் நடந்த திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் பொன்னுசாமி எம்எல்ஏ பேசினார். சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கப் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் பேளுக்குறிச்சி ஊராட்சி, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், ‘சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 4 ஆண்டு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக ஆதரவு தர வேண்டும்,’ என்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார், ஒன்றிய துணை செயலாளர் திராவிட மணி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.