தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி நடந்த நெடுஞ்சாலைகளின் தரம் குறித்து கோட்ட பொறியாளர்கள் ஆய்வு

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பல கிலோமீட்டர் தூரம் பல்வேறு ஊர்களில் ஏராளமான சாலை பணிகள் நடந்த வருகிறது . இதில் சில பணிகள் நடந்து முடிந்துள்ளது, சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

Advertisement

இந்நிலையில் சாலைகளின் தரம் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மதுரை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், திருச்சி கோட்டப் பொறியாளர் சேதுபதி ஆகியோர் தலைமையிலான பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட சாலைகளின் விவரம், மதிப்பீடு, அவற்றின் தன்மை, பராமரிப்பு, பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர், புதுக்கோட்டை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.5.45 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பரவெட்டி வயல் கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலை, ரூ.6.90 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பெருமாநாடு, கொன்னையூர் சாலை ஆகிய சாலைகளை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் பூபதி, வீரமணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement