தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூரில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்று வழங்கி பாராட்டு

அரியலூர், ஜூன் 4: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், காவல் துறையினர் திருமானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 1.05 கிலோ அளவிலான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல், கிரைம் டீம் உதவி ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான காவல்துறையினர் கீழப்பழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், அரியலூர் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய உதவிய, உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ஆனந்தன் மற்றும் அவர்களின் தலைமையிலான காவலர்களுக்கும், கயர்லாபாத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை தீவிர விசாரணையின் மூலம் கண்டுபிடித்த கயர்லாபாத் தனிப்பிரிவு காவலர் முருகானந்தம் அவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.