தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்சோலை, தங்காடு ஓரநள்ளி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஊட்டி, மே 30: நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்புகள் ஏற்பட்ட தாய்சோலை, தங்காடு ஓரநள்ளி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

Advertisement

நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாட்கள் முன்னதாக கடந்த 24ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உணரப்பட்டது. தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு, மின்துண்டிப்பு, வீடு இடிதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே மேல்குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட தாய்சோலை பகுதியில் மழை காரணமாக சேதமடைந்த சாலையை கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை இயக்குநர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை மேற்கொண்டு சேதமடையாமல் இருக்க உாிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தங்காடு ஓரநள்ளி பகுதியில் சேதமடைந்த தடுப்புசுவரையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கெளசிக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement

Related News