தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் நடவடிக்கை மாவட்ட நீதிபதி பேச்சு

 

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 14: குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசினார். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘குழந்தை தொழிலாளர்களை தொழிற்சாலை, வியாபார நிறுவனங்களில் பணியில் அமர்த்தக்கூடாது. குழந்தைகள் கல்வியறிவு பெற அரசு பல்வேறு வசதி செய்துள்ளது. அரசின் இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும்’ என்றார். இதில் விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம் மற்றும் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜெயராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement