தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1185 டன் நெல் நேரடி கொள்முதல்

 

Advertisement

நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் மாவட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. காவிரி பாசனம் மற்றும் ஏரி பாசனம், வாய்க்கல் பாசனத்தை நம்பி நெல் சாகுபடியில், மாவட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தவிர வாழை, மக்காச்சோளம், மற்றும் தோட்டக்கலை பயிர்கள், எண்ணை வித்து பயிர்கள், நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டாலும், பிரதான சாகுபடியாக நெல் சாகுபடி இருந்து வருகிறது. விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் பரப்பை ஆண்டுதோறும் அதிகரிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள், தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதியிலும் விவசாயிகளுக்கு தட்டுபாடு இன்றி கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

2024-2025ம் ஆண்டு பள்ளிபாளையம் பகுதியில் 9,920 ஏக்கரிலும், சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி வட்டாரத்தில் 5,425 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பரவலாக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2024 விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை மற்றும் கலியனூர் அக்ரகாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

இவை கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்தன. மேலும் எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப் பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 246 விவசாயிகளிடம் இருந்து 1,185.360 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து, சன்னரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.50 மற்றும் பொது ரகம் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.05 வீதம், சன்னரகம் நெல் 1117.960 மெட்ரிக் டன் மற்றும் பொது ரகம் 67.400 மெட்ரிக் டன் ஆக மொத்தம் 1185.360 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Related News