தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 

Advertisement

திண்டுக்கல், நவ. 18: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 284 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தல் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.3,14,000 மதிப்பீட்டிலும், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தல் திட்டத்தின் மூலம் 2 பேருக்கு தலா ரூ.1,20,000 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2,40,000 மதிப்பீட்டிலும், புதிய மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.1,10,000 மதிப்பீட்டில் என மொத்தம் 4 பேருக்கு ரூ.6,64,000 மதிப்பீட்டிலான மானியத் தொகை,

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 2 பேருக்கு ரூ.4,10,000 மதிப்பீட்டில் விபத்து மரணம் ஈமச்சடங்கு உதவித் தொகை, 5 பேருக்கு ரூ.2,65,000 மதிப்பீட்டில் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும் மற்றும் 14 பேருக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.3,25,000 மதிப்பீட்டில் ஆட்டோ நலத்திட்ட உதவித் தொகையை கலெக்டர் சரவணன் வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, துணை ஆட்சியர் பயிற்சி ராஜேஸ்வரி சுவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கீர்த்தனா மணி, செல்வன், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News