தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆத்தூர் அக்கரைப்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் ஆய்வு

நிலக்கோட்டை, செப். 13: ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் சுமார் 11.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தை பயன்படுத்தி யாரும் குடியேறவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. தற்போது அந்த நிலத்தினை ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

Advertisement

தொடர்ந்து அந்த நிலத்தினை சுத்தப்படுத்தி சாலைகள் அமைத்து ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கும், தகுதி அடிப்படையில் புதிய நபர்களுக்கும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும், விரைவில் இலவச வீட்டு மனை பட்டாவினை ஏற்கனவே பெற்றவர்கள் மற்றும் புதிய நபர்களுக்கு விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலங்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

 

Advertisement

Related News