கொடைக்கானல் அருகே ஆண் சடலம் மீட்பு
கொடைக்கானல், நவ.11: கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதி அருகே துர்நாற்றம் வீசியுள்ளது, இதனை தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருந்துவமனைக்கு அனுப்ப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement