தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அய்யலூர் சிறப்பு முகாமில் மனுக்கள் குவிந்தன

வேடசந்தூர், அக். 9: அய்யலூரில் தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நேற்று வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமை வகித்தார். இம்முகாமில் வருவாய்த்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 13 துறை அதிகாரிகள் பொது மக்களிடம் துறை ரீதியான கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இம்முகாமில் எம்எல்ஏ ேபசியதாவது: முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையில் ஆட்சி செய்து வருகிறார். அய்யலூர் பேரூராட்சியில் அதிக மலைக்கிராமங்கள் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றத்துக்கு பிறகு மலைக்கிராம மக்களுக்காக எண்ணற்ற தேவைகளை செய்து வருகிறது.

Advertisement

குறிப்பாக அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, பாலங்கள் போன்றவைகள் செய்துள்ளது. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் அதிகமாக கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என பேசினார். இந்நிகழ்ச்சியில் வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, மற்றும் 15 வார்டு கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகளான வேடசந்தூர் வட்டாட்சியர் சுல்தான், அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பத்மலதா மற்றும் 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

Advertisement