கள்ளிமந்தயத்தில் இன்று ‘கரண்ட் கட்’
ஒட்டன்சத்திரம், அக். 8: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் இன்று (அக்.8ம் தேதி, புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை கள்ளிமந்தயம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்ட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கள்ளிமந்தையம் உதவி செயற்பொறியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement