தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரம்- நாகனம்பட்டியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை தேவை

ஒட்டன்சத்திரம், நவ. 7: ஒட்டன்சத்திரம்- நாகனம்பட்டி பிரிவு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலிருந்து நாகனம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொல்லப்பட்டி, சங்குப்பிள்ளைபுதூர், கே.கே.நகர், சிக்கந்தர் நகர், தீயணைப்பு நிலையம் மற்றும் தாராபுரம் புறவழிச்சாலையை அடைய வாகனஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த வழியே வரும் வாகனங்கள் திண்டுக்கல்- பழநி தேசிய நெடுஞ்சாலையை அடையும் போது, சாலையை கவனிக்காமல் வேகமாக வந்து திரும்புவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையை கவனிக்காமல் வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால் உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலிருந்து நாகனம்பட்டி பிரிவு செல்லும் பகுதியில் குவியாடி மற்றும் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News