தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அகரம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் மயானத்திற்கு இடவசதி செய்து கொடுத்த அமைச்சருக்கு நன்றி

திண்டுக்கல், ஆக. 6: திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டூர் ஆவாரம்பட்டியில் உள்ளது ஆதிதிராவிடர் நகர். இப்பகுதி மக்கள் மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்து தர கோரி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அமைச்சர், உடனே அப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு இடவசதி செய்து கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து மாலையணிவித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அமைச்சர், கலைஞரின் கனவு இல்லம் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட அவை தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார்நத்தம் முருகேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அக்பர், இளங்கோவன் கலைராஜன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், பேரூர் செயலாளர்கள் அகரம் ஜெயபால், இளங்கோவன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related News