தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம்

திண்டுக்கல், நவ. 28: கொடைக்கானல் வட்டம், பெருமாள்மலையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி தலைமை வகித்தார்.

Advertisement

பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இம்முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் முடித்த சுமார் 150 பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். படித்த பழங்குடியினர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களில் தங்கும் மற்றும் உணவு வசதியுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு பழங்குடியினர் இளைஞர்களுக்கு இந்திய தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தவுள்ளனர்.

இதன்மூலம் பழங்குடியினர் இளைஞர்களின் பொருளாதாரம் தன்னிறைவு அடைந்து இவர்கள் மற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு முன் மாதிரியாகவும் திகழ வழிவகை ஏற்படுத்தப்பட்டது. இதில் டாக்டர் சைமன், ராஜாமுகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement