தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிக்கு ஆயுள் தண்டனை

 

Advertisement

பழநி, ஆக.19: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே கருமாசநாயக்கனூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). விவசாய கூலித்தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலை பணி நீக்கம் செய்து விட்டு, அதே பகுதியைச் சேர்ந்த வையப்பன் (55) என்பவரை முத்துலட்சுமி பணியமர்த்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த 2022ம் ஆண்டு டிச.23ம் தேதியன்று, வையப்பனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் சக்திவேல், சுத்தியலால் வையப்பன் தலையில் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இடையகோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பழநி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி மலர்விழி, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் சக்திவேலிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News