தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைவு: கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம், செப். 14: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்கின்றனர். விவசாயிகளிடம் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Advertisement

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, முகூர்த்த தினங்கள் இருந்ததால் தக்காளியின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்தது. தற்போது பயன்பாடு குறைந்த நிலையில் மார்க்கெட்டுகளில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது.

கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி பெட்டி ரூ.150க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.10 விலை போகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement