தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பட்டி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்

ரெட்டியார்சத்திரம், நவ.11: ஒட்டன்சத்திரம் செம்பட்டி சாலையில், குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம்-செம்பட்டி பிரதான சாலையில் ஆண்டரசன்பட்டி, புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரங்களில் இருபுறமும் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக நடந்து செல்லும் விதமாக பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் ஏராளமான இடங்களில் சாலை ஓரத்தில் மணல் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் சாலையின் மையப்பகுதியிலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலை ஓரங்களில் சுமார் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் வரை அதிகமாக மணல் பரப்பு ஆக்கிரமித்துள்ளதால் மோட்டார் சைக்கிள் செல்ல வழி இல்லாத நிலை இருந்து வருகிறது.

Advertisement

சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி விபத்துக்களை சந்திக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் தூள்கள், தூசிகள் காற்றில் பறந்து பின்னால் டூவீலர்களில் வருபவர்கள் மீது விழுவதால் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.இதே போல் இரவு நேரங்களில் வாகனங்களில் வெளிச்சமின்மை காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள மணல் குவியலை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News