தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1.2 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் சிக்கினர்

 

Advertisement

திண்டுக்கல், டிச.10: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பிமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில், எஸ்.ஐ மலைச்சாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டியபட்டி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் வட்டாத் (37), மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), நத்தம் குட்டுபட்டியை சேர்ந்த ராஜதுரை (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 2 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement