ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
Advertisement
பழநி, டிச. 5: பழநி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் பயண பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோட்டீஸ்களை வழங்கினர். அதில், ரயில் நின்றவுடன் ஏறி இறங்க வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் விற்கும் உணவு பண்டங்களை மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும். உடன் வருபவர்கள் தருகின்ற உணவுகளை வாங்கி உண்ண கூடாதென வலியுறுத்தப்பட்டிருந்தன.
Advertisement