தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலக்கோட்டை தாதன்குளத்தில் பள்ளி கேட்டில் பழுதடைந்த குடிநீர் தொட்டி

நிலக்கோட்டை, செப். 3: நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை தாதன்குளத்தில் பள்ளி நுழைவுவாயிலில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே இத்தொட்டியை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நிலக்கோட்டை ஒன்றியம் மட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்டது தாதன்குளம் கிராமம். இப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

Advertisement

அதன்பின் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மட்டும் மராமத்து பணி என்ற பெயரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வெள்ளை வண்ணம் மட்டுமே அடித்தனர். மற்றபடி எந்தவொரு மரமாத்து பணியும் பார்க்கவில்லை. இதனால் தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பாக தூண்கள் முதல் மேல் பகுதி வரை பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உள்ளது.

இவ்வாறு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பள்ளி நுழைவு வாயிலில் இருப்பதால் அதன் வழியாக தினந்ேதாறும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் மழைக்காலம் துவங்க இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement