தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் அருகே டூவீலர் மீது கார் மோதி 2 பேர் பலி

திண்டுக்கல், செப். 3: திண்டுக்கல் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி காளியம்மன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (53). முருகன் (55). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் சொந்த வேலையாக டூவீலரில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் வந்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

Advertisement

டூவீலரை முருகானந்தம் ஓட்டினார். திண்டுக்கல்- பழநி சாலையில் குஞ்சனம்பட்டி அருகே வந்த போது, எதிரே தருமத்துப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் முருகானந்தம், முருகன் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த தருமத்துபட்டியை சேர்ந்த கோகுல்நாத் (25) படுகாயமடைந்தார். தகவலறிந்து திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகுல்நாத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பலியான இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலர் மீது கார் மோதி இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement