தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

Advertisement

பெரம்பூர்: தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயமடைந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுதித்தனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோயிலில் நேற்று முன்தினம் 48வது ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்புப்படை குழுவினர் அக்னி குண்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். தீமிதி திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பானு (45) என்பவர், தீயில் இறங்கியவுடன் கால் தடுமாறி அக்னி குண்டத்தில் விழுந்தார். இதில் அவருக்கு கால் மற்றும் கை ஆகிய இடங்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி குண்டத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

Related News