தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதுகாப்பிற்கு சிறப்பு சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனை தொடங்கியது

சென்னை: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதிப்பிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் பாதங்களைப் பராமரிக்கும் நீரிழிவு மூட்டு பாதுகாப்பு மையத்தை [Advanced Diabetic Limb Saving Centre] தொடங்கி உள்ளது. ‘‘உயிர்களை காப்பாற்ற மூட்டுகளைக் காப்பாற்றுவோம்’’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. மேம்பட்ட நீரிழிவு மூட்டு பாதுகாப்பு மையமானது கீழ்ப்பாக்கம் அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனைகளில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். அதிக ஆபத்து உள்ள கால் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தீர்வுகளை அளிக்கும் சரியான சிகிச்சை உத்திகள், நோயாளிகளுக்கு கடுமையான அறுவை சிகிச்சைகளின் தேவையை வெகுவாக இந்த மையத்தின் மூலம் குறைக்கும்.
Advertisement

இந்த மையத்தை குறித்து மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் புருஷோத்தமன் மற்றும் சபரி கிரிஷ் அம்பாட் கூறியதாவது: நீரிழிவு மூட்டு பாதுகாப்பு சிகிச்சை மையத்தின் குறிக்கோள், பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கான நவீன சிகிச்சை அளிப்பது தான். பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களாக ஆறாத காயம் இருக்கும். எண்டோவாஸ்குலர் மற்றும் மைக்ரோ சர்ஜிக்கல் நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றங்கள், மருத்துவர்கள் உடலில் உள்ள மற்ற பாகங்களிலிருந்து தோல் மற்றும் மென்மையான திசுக்களைப் பயன்படுத்தி நீண்டகாலமாக ஆறாமல் இருக்கும் காயங்களை துல்லியமாக குணப்படுத்த உதவுகின்றன.

இந்த புதுமையான அணுகுமுறையானது, துல்லியமான நீரிழிவு நோய் சிகிச்சை மேலாண்மை, அதிக அக்கறையுடனான காயப் பராமரிப்பு மற்றும் மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சை முறைகளின் சரியான பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் மூட்டு துண்டிக்கப்படுவதைத் தடுப்பதோடு, அவர்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு முழுமையான சிகிச்சையை வழங்குவது ஆகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News