தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்னலில் டூவீலர் மீது அரசு பஸ் மோதல்

தர்மபுரி, நவ. 28: தர்மபுரியில் சிக்னலில் சென்ற டூவீலர் மீது மோதி அரசு பஸ் ஏறிய விபத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி (29). இவரது மனைவி பிரபா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம், சொந்த வேலையாக, கணவன், மனைவி இருவரும் நகராட்சி அலுவலகத்துக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலர் பென்னாகரம்- தர்மபுரி மெயின் ரோடு, நான்குரோடு சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் நான்கு பக்கங்களிலும், வாகனங்கள் வரவில்லை என்றதால், திருப்பதி சற்று கவனக்குறைவாக டூவீலரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ் ஒன்று, சிக்னல் சாலையில் வந்தது. வந்த வேகத்தில் அந்த பஸ் டூவீலர் மீது மோதி, அதன் மீது ஏறியது. இதில், டூவீலரில் இருந்து கீழே விழுந்த தம்பதி சற்று தள்ளி நகர்ந்ததால், நூலிழையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்து காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement