தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெல்லுஅள்ளியில் வரப்பு தகராறில் இருதரப்பினர் மோதல் பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு

பாலக்கோடு, ஆக. 27: மாரண்டஅள்ளி அடுத்த பெல்லுஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளப்பன்(39). இவர் பக்கத்து நிலத்தை சேர்ந்த மாதையன் என்பவரது நிலத்தில் உள்ள, பொது வரப்பை காலம் காலமாக நடைபாதையாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி காலை காளப்பன், வரப்பு பாதை வழியாக தனது தோட்டத்திற்க்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாதையன் மகன் அருள்(28), அவரது தாய் இன்பவள்ளி(55) ஆகியோர், வரப்பை வெட்டி நடைபாதையை சேதப்படுத்தி கொண்டிருந்தனர். இதனை காளப்பன் தட்டிகேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ‘இது எங்கள் நிலம் அப்படி தான் செய்வோம்’ என கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், இருதரப்பையும் சேர்ந்த அருள், இன்பவள்ளி, ராணி, கலைச்செல்வி, காளப்பன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement