தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் கடத்திய பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்

காரிமங்கலம், நவ.22: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் சட்ட விரோதமாக சிலர் மண் வெட்டி கடத்துவதாக புகார்கள் வந்தது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வசம் உள்ள ஏரியில், அதிகாரிகள் சிலரின் ஆசியுடன் மண் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி குண்டலபட்டி ஏரியில் மண் எடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. விவசாய பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட அளவு மண் எடுக்க அனுமதி அளித்திருந்தனர.

Advertisement

ஆனால், மண் கடத்தல் கும்பல் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், இரவு பகலாக விதிமுறைகளை மீறி டிப்பர் லாரிகள் உட்பட பல்வேறு பெரிய கனரக வாகனங்களில் மண்ணை லோடு லோடாக கடத்தி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், கனிமவளத்துறை அதிகாரிகள் நேற்று குண்டலபட்டி ஏரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கமலேசன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News