தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

Advertisement

தர்மபுரி, அக். 13: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் குண்டல அள்ளி ஊராட்சி, ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு நினைவு திறனை மேம்படுத்தும் வகையில், மறதியை குறைக்கும் திறன், மாயாஜால நிகழ்ச்சி, வன விலங்குகளை, குறிப்பாக பாம்புகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.

தமிழ்நாடு வேளாண்மை துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் குணசேகரன் பேசும் போது, மாணவர்கள் தேர்வுகளை அணுகும் திறன், ஞாபக சக்தி, மறதி குறித்து பேசினார். தொடர்ந்து, மாயாஜால வித்தைகள் செய்து காண்பிக்கப்பட்டது. ஜெகந்நாதன் மாணவர்களின் நினைவாற்றல் குறித்து பேசினார்.

உங்கரானஹள்ளியை சேர்ந்த ராம்குமார் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் பாம்புகள் வகை, விஷத் தன்மை, பாம்புகளின் உணவு, சூழலியல் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வீடியோ மூலம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பாம்புகளை அடிக்கக்கூடாது என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் ராகவேந்திரன் தலைமையிலான குழு செய்திருந்தது. ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.

Advertisement

Related News