தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மயானத்திற்கு செல்ல சாலை வசதி

தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்டம் பாலவாடி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டர் சதீஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் வட்டம் பாலவாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை இதுவரை மண்சாலையாகவே உள்ளது. இதனால் மயானத்திற்கு மழைகாலங்களில் செல்லும் போது, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது, வழுக்கி விழும் நிலையுள்ளது. இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மயானத்திற்கு ஈமகாரியங்கள் செய்வதற்காக செல்லும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி பாலவாடி மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.