தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவன் கோயிலில் சிலை திருட்டு

பாலக்கோடு, டிச.12: பாலக்கோடு அருகே சிவன் கோயிலில், பூசாரி ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது, இக்கோயில் கர்ப்ப கிரகத்தில் சிவலிங்கத்துடன் கூடிய வாழைத்தாய் அம்மன் சிலை இருந்தது. இக்கோயிலின் பூசாரியாக கணேசன்(52) என்பவர் இருந்து வருகிறார். சந்நியாசியான இவர், நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்ததும் வழக்கம்போல் தியானத்தில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்த போது சிவலிங்கம் அருகில் இருந்த வாழைத்தாய் அம்மன் சிலை காணாததை கண்டு திடுக்கிட்டார். ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது, மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அதில், ஒரு அடி உயரமுள்ள பஞ்சலோக சிலையின் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதன்பேரிலி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement