தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

தர்மபுரி, ஆக.8: தர்மபுரி அருகே, கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே, சோகத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (50). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயில் பூசாரியாக உள்ளார். வாரந்தோறும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் பவுன் தங்கம் இருந்தது. பிறகு, மீண்டும் அவை உண்டியலில் வைத்து பூட்டி, கோயிலேயே வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News