தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலரில் வந்து ஆடு திருட முயன்ற 3 பேருக்கு வலை

அரூர், டிச.7: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பாரதி. விவசாயியான இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் பாரதி மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி ஆகியோர் தூக்கம் விழித்து எழுந்து வீட்டின் வெளியே வந்தபோது, 3பேர் பாரதியின் மாட்டு கொட்டகையில் இருந்த 3 ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து டூவீலரில் தப்பிச்செல்ல முயன்றனர்.அவர்களை பாரதியும், பழனியும் பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் செல்போன், திருடிய 3 ஆடுகள் மற்றும் டூவீலரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாரதி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஒருவரின் அடையாளம் தனக்கு தெரியும் எனவும், அவர் கீழ்மொரப்பூரை சேர்ந்த வசந்தகுமார் எனவும், பாரதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய 3பேர் குறித்து, அவர்கள் விட்டு சென்ற செல்போனை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement