தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக எச்ஐவி தின விழிப்புணர்வு

தர்மபுரி, டிச.2: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்க தொடக்க விழா நேற்று நடந்தது. இப்பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். முன்னதாக எச்ஐவி குறித்து கல்லூரி மாணவிகள், பாடலுக்கு நடனமாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியானது தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு, நெசவாளர் காலனி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சக்திவேல் என்பவர், இலவச மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளித்தார். அதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அருகிலுள்ள அம்மா உணவகத்திற்கு அழைத்துச்சென்று உணவு அளிக்குமாறு உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement