தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழை எதிரொலி: தர்மபுரியில் தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு

தர்மபுரி, அக்.26: தர்மபுரியில், தொடர் மழை காரணமாக, தக்காளி மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகபாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக தக்காளி அறுவடை பாதித்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரே மாதத்தில், இரு மடங்காக உயர்ந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையில், கடந்த 21ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.16 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று, வரத்து குறைவால் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.26க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ரூ.20 ஆக இருந்த கத்திரிக்காய் ரூ.26க்கும், ரூ.275ஆக இருந்த பச்சை பட்டாணி ரூ.300க்கும், ரூ.70 ஆக இருந்த பீன்ஸ் ரூ.106க்கும், ரூ.100 ஆக இருந்த டபுள்பீன்ஸ் ரூ.140க்குமாக பல்வேறு காய்களின் விலை உயர்ந்து விற்பனையானது.

Advertisement

Related News