வரத்து குறைந்ததால் தேங்காய் விலை உயர்வு
காரிமங்கலம், நவ. 11: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேனஅள்ளி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் 1 லட்சத்திற்கு குறைவான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து ரூ.21 முதல் ரூ.32 வரை பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் வரத்து குறைந்த நிலையில், விலை சற்று அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement