தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு அலுவலர்கள், மாணவர்கள் வசதிக்காக மொரப்பூரில் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் நிறுத்த வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

அரூர், செப்.3: மொரப்பூர் ரயில் நிலையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த இரண்டு மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் மொரப்பூர் அதிகாலை 3.38 மணிக்கு வந்து சென்னைக்கு காலை 8.05 மணிக்கு சென்று சேரும். மங்களூரு எக்ஸ்பிரஸ் கடந்த சில வருடங்களாக நிற்பதில்லை. இதனால் ஏராளமான அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

அதிகாலையில் சென்னை செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதை ரத்து செய்துள்ளதால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘கொரோனா காலத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், சில ரயில்கள் நின்று செல்கிறது. எனவே, அரசு அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களை ரத்து செய்ததை, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement