தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் குவியலை அகற்ற நடவடிக்கை

 

Advertisement

தர்மபுரி, டிச. 1: தர்மபுரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி- பெங்களூரு செல்கிறது. காரிமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பைபாஸ் முதல் மணிக்கட்டியூர் வரை செல்லும் சாலையோரம், மண் குவிந்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், இந்த சாலையோரம் முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது.

மழை இல்லாத நாட்களில், இந்த சாலையோரம் உள்ள மண், காற்றினால் புழுதிக்காற்றாக வீசுகிறது.இதன் காரணமாக, இந்த இடத்தை கடந்து செல்லும் போது, டூவீலரில் செல்பவர்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி, சாலையின் நடுவே உள்ள பாதைக்குள் பயணிக்கின்றனர். இதனால் டூவீலரில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள், டூவீலரின் மீது மோதும் அபாய நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் நடந்து செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். வாரத்திற்கு ஒரு முறையாவது, இந்த சாலையோரம் உள்ள மண்ணை அகற்றினால் இந்த வழியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News