தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

 

Advertisement

பெரியகுளம், ஜூலை 17: பெரியகுளத்தில் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாட்டுதல் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆனி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 2ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நடந்தது. இதையடுத்து, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனிப்பெருந்திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

நேற்று கவுமாரியம்மனுக்கு கோயில் முன்பு உள்ள சாட்டுதல் கம்பத்திற்கு மஞ்சள் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். சில பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி மற்றும் ஆயிரம்கண் பானை எடுத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

Advertisement

Related News