தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல்மலையனூரில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோயிலில் திரண்டு கைகளில் தீபம் ஏந்தி வழிபட்ட பக்தர்கள்

 

Advertisement

மேல்மலையனூர், ஜூன் 27: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் தீபம் ஏந்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆனி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தங்க கவசம் அனிவிக்கப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு ஆனி மாத சிறப்பு அலங்காரமாக ராஜ்ய பிரதாயினி எனும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை முதல் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் உற்சவர் அங்காளம்மனை பம்பை, மேளதாளங்கள் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அமர வைத்து தாலாட்டு பாடல்களைப் பாடினர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கைகளில் தீபம் ஏந்தி உயர்த்திபிடித்தபடி மனமுருகி அம்மனை வேண்டி வழிபட்டனர். இந்த காட்சி விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலகத்துக்கு வந்த விண்மீன்கள் போல காட்சியளித்தது. ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

Advertisement

Related News