தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்தர்கள் நேர்த்திகடன் தாராள அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

கும்பகோணம், ஏப்.2: கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையத்தில் உள்ள தாராள அம்மன் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர். கும்பகோணம் அருகே தாராசுரம் பேரூராட்சி, எலுமிச்சங்காபாளையம் மேலத்தெருவில் எழுந்தருளியுள்ள தாராள அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் 18ம் ஆண்டு விழா கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தாராசுரம் அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரை, காவடி, அலகுகாவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கஞ்சி வார்த்தலும், இரவு சந்தன காப்பு அலங்காரத்துடன் இவ்வாண்டிற்கான பங்குனி திருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News