தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.3.99 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.பி துவக்கி வைத்தார்

 

மொடக்குறிச்சி, ஜூலை 6: மொடக்குறிச்சி பேரூராட்சியில் தார் சாலை, கான்கிரீட் சாலை, வடிகால் வசதி என ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு கே.ஈ பிரகாஷ் எம்.பி பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்தி பாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்காட்டு தோட்டம், செந்தூர் நகர், அண்ணா நகர், தூரபாளையம் கம்பர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கும், அரசு மருத்துவமனை அருகில் உள்ள வஉசி வீதி, வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதி, தூரபாளையம் திருவள்ளுவர் வீதி ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கும் 10-வது வார்டில் பூந்துறை சாலை முதல் மொடக்குறிச்சி சந்திப்பு வரை வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினார்.  மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி பேரூர் திமுக செயலாளர் சரவணன், செயல் அலுவலர் ரமேஷ் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஞானசுப்பிரமணி, தனலட்சுமி பழனிச்சாமி, பிரதீபா முருகேசன், காந்திமதி ரவிச்சந்திரன், செல்வி இளங்கோ, கண்ணுச்சாமி, மகன்ய ஆனந்த், ஜெயலட்சுமி பாபு, சித்ரா, செல்வராஜ் பேரூர் துணைச்செயலாளர் தன வெங்கடேஷ், அவைத்தலைவர் பழனிச்சாமி, மில் மணி, செந்தில்குமார், ரமேஷ், சீனிவாசன், முருகேசன், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related News