தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொட்டாம்பட்டியில் ஒன்றிய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டப் பணிகள்: எம்பி தலைமையில் ஆய்வு

மேலூர், ஜூன் 5: மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் அளித்த அறிக்கை தொடர்பாக எம்பி மற்றும் கூடுதல் கலெக்டர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வளர்ச்சி பணிகள் மற்றும் அவற்றின் மீதான அறிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கொட்டாம்பட்டியில் நேற்று நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் செயற்பொறியாளர் (வளர்ச்சி) இந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லப்பாண்டியன், சங்கர் கைலாசம், மேலூர் தாசில்தார் செந்தாமரை மற்றும் குடிநீர் வாரியம், சுகாதார துறை, மின்சார துறை, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் கிராம ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை எம்பி வெங்கடேசன், கூடுதல் கலெக்டர் மற்றும் பிடிஓக்கள் பார்வையிட்டனர்.

Advertisement

Related News