தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மாற்றுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 

கன்னியாகுமரி, ஜூலை 15: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நினைவு தோரண வாயில் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியால் காந்தி மண்டபம் மற்றும் கடற்கரை நோக்கி செல்லும் முக்கிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கடற்கரைக்கு சென்று வந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் வர்த்தகர்கள் அதிகாரிகளிடம் கூற அவர்கள் புதிய நடைபாதை ஏற்பாடு செய்ய வேண்டி கன்னியாகுமரிக்கு வந்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் வலியுறுத்தினர். அமைச்சர் மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.

Related News