தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்

தா.பழூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, உள்ளிட்ட காய்ச்சல்கள் மற்றும் கொரோனா உள்ளிட்ட இதர வைரஸ் நோய்களின் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெங்கு கொசு புழு களப்பணியாளர்கள் பணி 20/5/2025 அன்று முடிவடைந்து விட்டது. ஆகையால் தற்பொழுது பணிகள் இல்லாத நிலையில் பொருளாதார சூழ்நிலையில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் இவர்களது குடும்பம் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளது. ஆகையால் இதனை கருத்தில் கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் டெங்கு கொசு ஒழிப்பு முன் களப்பணியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் மாவட்ட தலைவர் கவிதா, தா.பழூர் துணைத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ரவி மற்றும் தேவதாஸ், மகாராஜன், பெரியசாமி, தங்கராசு, கண்ணன் உள்ளிட்டோர் மனுக்களை அளித்தனர்.

Related News