தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

 

Advertisement

ராமேஸ்வரம்,மே 21: ராமேஸ்வரத்தில் சி.என்.ஜி எரிவாயு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோக்களில் எரிவாயு நிரப்ப பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவில் ஆட்டோக்கள் அனைத்தும் டீசல் மற்றும் பெட்ரோல் எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி ஆட்டோவை கேஸ் எரிவாயு மூலம் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மூலம் ஆட்டோ உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அதிகமான ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயுக்கு மாற்றப்பட்டது. தற்போது ராமேஸ்வரத்தில் சிஎன்ஜி எரிவாயு மூலம் அதிக அளவு ஆட்டோக்கள் சுற்றுலா வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இதற்கு எரிவாயு நிரப்பும் நிலையங்கள் போதிய அளவு இல்லாததால் எரிவாயு கிடைக்கும் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு எரிவாயு நிரப்ப ஓட்டுநர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களும் எரிவாயு நிரப்புவதால் எரிவாயு நிலையம் வாகனங்கள் சூழ்ந்து திணறி வருகிறது.

இதனால் கேஸ் எரிவாயு விரைவில் தீர்ந்து விடுவதால் அருகிலுள்ள கேஸ் எரிவாயு நிரப்பும் நிலையத்திற்கு பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. தற்போது அதிகரித்து வரும் சிஎன்ஜி எரிவாயு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகம் கூடுதல் எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, எரிவாயு தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளராக சி.ஆர் செந்தில்வேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News