தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர் தி.மலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகே தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் நேற்று வைக்கப்பட்டது. அதில், பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, ராஜகோபுரம் அருகே திட்டிவாசல் பகுதியில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், நெய் காணிக்கையை பணமாகவும், காசோலை மற்றும் வரைவோலையாகவும், பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தியும், இணையதளம் மூலமும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவத்தின்போது, கோயில் தங்க கொடிமரம் அருகே பிரார்த்தனை உண்டியல் அமைப்பது வழக்கம். தீபத்திருவிழாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்துவது அண்ணாமலையார் கோயிலின் மரபாகும்.

அதன்படி, நேற்று காலை கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகே பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது. அப்போது, இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், இராம.பெருமாள் மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் தீபத்திருவிழா காணிக்கை செலுத்தினர். வரும் 13ம் தேதி வரை பிரார்த்தனை காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement