தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் வங்கி அமைக்க முடிவு

 

Advertisement

ஈரோடு, ஜூலை26: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64 கோடி செலவில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடத்தில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த ஆபரேசன் தியேட்டர், கேத்லேப், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட உள்ள நிலையில் தாய்பால் வங்கி தொடங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மக்கள்நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) அம்பிகா சண்முகம் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெசாலிட்டி கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் கேத்லேப் கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாததால் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பபட்டு வருகின்றனர். எனவே ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய்பால் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாய்பால் வங்கியானது புதிய கட்டிடத்தின் 2வது மாடியில் செயல்படும். தாய்பால் தானம் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் தாய்பால் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News