தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படை காரணம் தெரியவில்லை: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம்: உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படை காரணம் தெரியவில்லை என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் கடந்த 1ம் தேதி அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு குடிநீர் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என கருதுகிறோம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து தண்ணீரை வாங்கி அதை அப்படியே வினியோகம் செய்கிறோம்.
Advertisement

கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு இறப்பு ஏற்பட்டுள்ளது. 2 பகுதிகளில் தலா 5 சோதனைகளை எடுத்துள்ளோம். இந்த முடிவு வந்தால் மட்டுமே, உண்மை என்ன என்பது தெரியவரும். கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வரலட்சுமி (88) வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இறந்துள்ளார். ஒருவேளை அவருக்கு வயிற்று போக்கு, வாந்தி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அது வெளியே தெரியவில்லை. திருவேதியின் சொந்த ஊர் மாங்காடு. 4 நாட்களுக்கு முன் பல்லாவரம், காமராஜர் நகரில் உள்ள சகோதரி மீனா என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த திருவேதி நேற்று முன்தினம் கழிப்பறையில் வழுக்கி விழுந்துள்ளார். அதேபோல் கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மோகனரங்கம் என்பவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு உண்டு. திருவேதி, மோகனரங்கம் உடல்களின் முதல்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படையான காரணம் தெரியவில்லை. அதனால் விரிவான அறிக்கைக்கு புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வர 8 வாரங்கள் ஆகும். அதன்பின் முழு விவரம் தெரியும். இவ்வாறு கூறினார்.

Advertisement